சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அமோமைட்ஸ்
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்ற 300 வகையான தொல்லுயிர் எச்சங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அளவில் அமோனைட்ஸ்களுக்கென்று பிரத்யேக அருங்காட்சிகயம் அமைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.;
பெரம்பலூர் மாவட்டம் காரை ஊராட்சியில் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அமோமைட்ஸ்களை - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை ஊராட்சியில் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அமோமைட்ஸ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இன்று (18.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அம்மோநைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவு கிடைக்கின்றது. தலைக்காலி எனும் வகையினை சேர்ந்த அம்மோநைட்ஸ்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது. இந்த கடல்சார் உயிரினங்களில் படிமங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், பிலிமிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றது. இந்த கடல் வாழ் உயிரினமான அம்மோநைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் பார்வையிடுவதற்கு ஏதுவாக தொலைநோக்கி கருவிகள் அம்மோநைட்ஸ் குறித்த தகவல் குறிப்புகள் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை இப்பகுதியில் ஏற்படுத்திட பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் சிறப்பு வாய்ந்த இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளும் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள கனிமவளத் துறை அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அம்மோநைட்ஸ்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 112 வகையான தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றது. அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்ற 300 வகையான தொல்லுயிர் எச்சங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அளவில் அமோனைட்ஸ்களுக்கென்று பிரத்யேக அருங்காட்சிகயம் அமைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) ரா.வேலுசாமி, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார், புவியியல் துறை உதவி மேலாளர் பிரசாந்த்சுந்தரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.