திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து2 வயது குழந்தை குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து2 வயது குழந்தை குழந்தை உயிரிழப்பு

Update: 2024-10-04 08:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சின்னபசிலிகுட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு! அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னபசிலிகுட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் பிரவீனா தம்பதியரின் குழந்தை கிருத்திகா வயது( 2) குழந்தையின் தாத்தா காந்தி என்பவர் தண்ணீர் தொட்டியில் மோட்டார் போட்டு தண்ணீர் நிரப்பி கொண்டு இருந்தபோது தண்ணீர் தொட்டி அருகே இரண்டு வயது குழந்தை கிருத்திகா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியிள் தவறி விழுந்துள்ளார். அதன்பின் விளையாடி கொண்டிருந்த குழந்தை காணவில்லை என குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரமாக தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் தண்ணீர் தொட்டியை பார்த்துள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டியில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தண்ணீர்தொட்டியில் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News