பட்டப்பகலில் துணிகரம் குளித்து தொழிலாளி வீட்டில் 20 சவரன் திருட்டு போலிசார் விசாரணை

திருட்டு

Update: 2024-07-25 16:28 GMT
வாலாஜாபேட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம் கூலி தொழிலாளி வீட்டில் பீரோ உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் சீட்டு பணம் திருட்டு வாலாஜாபேட்டை போலிசார் விசாரணை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் தென்மேட்டு தெருவை சேர்ந்த முரளி (40) என்பவர் சிப்காட் பகுதியில் கம்பி கட்டும் கூலி வேலை செய்து வருகிறார் இவரது மனைவி உமாராணி (36) இவர்களுக்கு 9 வயதில் மகனும் 7 வயதில் மகளும் உள்ளனர் இந்த நிலையில் இன்று காலை முரளி மற்றும் அவரது மனைவி உமாராணி ஆகியோர் வேலைக்கும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று நிலையில் உமாராணி 100 நாள் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.. இதன் காரணமாக 100 நாள் பணியை முடித்து கொண்டு பிற்பகல் உமாராணி வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது மேலும் இச்சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து உமாராணி தன்னுடைய வீட்டில் பீரோவில் 20 சவரன் தங்க நகை மற்றும் சீட்டு பணம் 2 லட்சம் ரூபாய் திருடு போனதாக தெரிவித்தார் மேலும் அவருடைய கணவர் முரளி கொடுத்த புகாரின் அடிப்படையில் வாலாஜாபேட்டை போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News