தவறான உறவுமுறை காதலால், வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது

வத்தலக்குண்டு அடுத்த, விருவீடு அருகே கண்ணாபட்டியில் தவறான உறவுமுறை காதலால், வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது

Update: 2024-09-07 20:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை அடுத்த, விருவீடு அருகே, கண்ணாபட்டியைச் சேர்ந்தவர் பூபாண்டி, இவர், கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் கபிலன் வயது 22 இவர், சென்னை துறைமுகத்தில், கண்டெய்னர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கண்ணாபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது 17 வயது மகளை, கபிலன் ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. அந்தப் பெண் கபிலனுக்கு சித்தி மகள் தங்கை முறை எனக் கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தார்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், மீண்டும் அந்த பெண்ணிற்கு கபிலன் காதல் தொல்லை கொடுத்ததால், வெள்ளிக்கிழமை இரவு கண்ணாபட்டி வீட்டில் இருந்த அந்தப் பெண்ணிடம் சென்று, வாலிபர் கபிலன் காதலிப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். இதனை, மணிகண்டன் மீண்டும் எச்சரித்துள்ளார். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிகண்டன் இவரது உறவினர்கள் பொன்ராம் மற்றும் பொன்னையா ஆகிய மூன்று பேரும், கபிலனை அறிவாலை எடுத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கபிலன் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த விருவீடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபிலனின் உடலை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டன், பொன்ராம், பொன்னையா ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளில் நடைபெற்ற இக்கொலை சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News