சேலம் மாநகரில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கமிஷனர் உத்தரவு;

Update: 2025-07-26 03:44 GMT
சேலம் மாநகரில் நேற்று 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய கஸ்தூரி, கிச்சிப்பாளையத்துக்கும், கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய செல்வராணி கருப்பூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி அன்னதானப்பட்டிக்கும், அங்கு பணியாற்றிய கண்ணன் இரும்பாலைக்கும், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி அம்மாபேட்டைக்கும், அங்கு பணியாற்றிய மோகனா மத்திய குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி பிறப்பித்துள்ளார்

Similar News