10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தாளாளர் பாராட்டு.சிறந்த முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்ப

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தாளாளர் பாராட்டினர். மேலும் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பள்ளியின் தாளாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ;

Update: 2025-05-17 09:56 GMT
அரியலூர் மே:17 - அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் தேர்வு எழுதிய இடையாறு ஏந்தல் கிராமத்தைச் சார்ந்த வெங்கடேசன் தேவி தம்பதியரின் மகள் அபிநயா என் மாணவி 500-க்கு 494 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும்ம், மாவட்டத்தில் நான்காவது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் பள்ளியில் பயின்ற 50% மாணவர்கள் 500-க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மாணவி அபிநயா மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அனைவரையும் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன், மற்றும் முதல்வர், துணை முதல்வர், சிபி எஸ் இ பள்ளி முதல்வர், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து நல்ல பழக்கவழக்கங்களையும், பள்ளிக்கு நேரம் தவறாமல் மாணவர்கள் வருகையையும், நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர் கொண்டு பாடம் கற்பிப்பதாகம், மாணவர்களுக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு உடனடியாக சந்தேகங்களை நிவர்த்தி செய்வதாகவும், மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், பெற்றோர்களும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மாணவி அபிநயா கூறும் போது :- எனது தாய் தந்தையரின் குடும்ப சூழ்நிலையும் அவர்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து நான் படித்தேன், மேலும் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்,.முதல்வர் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்த எனது பெற்றோர்களுக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டராவதே தனது லட்சியம் டாக்டராகி ஏழை எளியவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என தெரிவித்தார் 

Similar News