பேக்கரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

பேக்கரி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது. போலீசார் நடவடிக்கை.

Update: 2024-07-11 04:48 GMT

கைது

சேலம் கந்தம்பட்டி பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் கோரிமேட்டை சேர்ந்த பாலமுருகன் (வயது 31), சம்பவத்தன்று 2 பேர் வந்து டீ மற்றும் தின்பண்டங்கள் வாங்கி தின்று விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். அபே்பாது இருவரும் பாலமுருகனை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பிரவீன் (25), அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News