உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

மடையன்காட்டுப்புதூரில், திருமணிமுத்தாற்றுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-01-08 13:44 GMT

மடையன்காட்டுப்புதூரில், திருமணிமுத்தாற்றுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

எலச்சிபாளையம் அடுத்த, மடையன்காட்டுபுதூர் கிராமத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் திருமணிமுத்தாட்டின் குறுக்கே, சிறுபாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் அவ்வப்போது தண்ணீர் அதிகரிக்கப்படும் காலங்களில் பாலத்திற்கு மேல் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. அச்சமயத்தில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனர். தற்சமயம் உள்ள சிறு பாலத்தை இடித்து விட்டு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மடையன்காட்டுப்புதூரில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News