மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 21 ல் மின் நிறுத்தம்

பல்லக்காபாளையம்  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 21 ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Update: 2023-12-19 15:37 GMT

பல்லக்காபாளையம்  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 21 ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம்  துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 21 ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இது பற்றி பள்ளிபாளையம்  மின் வாரிய செயற்பொறியாளர் கோபால்    தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் அருகே  பல்லக்காபாளையம்  துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக  டிச. 21ல்  காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, வளையக்காரனூர்,  பல்லக்காபாளையம்,  ஆலத்தூர்,  புதுப்பாளையம்,  மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் ஹைடெக் பார்க் மற்றும் காவேரி ஹைடெக் பார்க்  உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News