கூலித்தொழிலாளி தற்கொலை

குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2024-09-13 11:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ராஜா, 24. விசைத்தறி கூலி. இவர் தனது நண்பர் சர்வீன்குமார் என்பவரது மொபைல் போனுக்கு நேற்று காலை 05:15 மணிக்கு, ஐ மிஸ் யூ மச்சான் என்று தகவல் அனுப்பி உள்ளார். இதனை கண்ட சர்வீன்குமார் நேரில் சென்று பார்த்த போது, ராஜாவின் வீட்டு கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவு சந்து வழியாக பார்த்த போது, வேட்டியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து, அவரை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. ராஜாவின் தம்பி தங்கராஜ்,க்கு உடல்நிலை சரியில்லாததால் பெற்றோர் அவரை ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தனர். அவருக்கும் தகவல் தர, நேரில் வந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். குமாரபாளையம் போலீசார் புகார் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News