சேலம் புத்தக கண்காட்சி 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சேலம் புத்தக கண்காட்சி வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு

Update: 2023-12-03 13:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா கண்காட்சி நடந்து வருகிறது. இதனை கடந்த 21ஆம் தேதி அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 7000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் வந்து புத்தக கண்காட்சி பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். தினமும் மாலையில் சிறப்பு கவியரங்கம் நடத்தப்பட்டது. இதில் எழுத்தாளர்கள் பங்கேற்று உரையாற்றினர். மேலும் மாணவிகளுக்கு வினாடி வினா, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று வரை 1.21 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி இருந்தது. இந்த புத்தக கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று நாட்கள் அதிகரித்து 6ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News