வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் தெரிவிப்பு !
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்;
By : King 24x7 Angel
Update: 2024-03-18 07:31 GMT
மருத்துவர்கள்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் (20) என்பவர் மார்ச் 11-ஆம் தேதி விபத்தில் சிக்கி ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்ச் 14-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, மூளைச்சாவு அடைந்த தனுஷின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்த 58 வயது நபருக்கு தமிழ் நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவர்கள் டி.சரவணன், கார்த்திக் மதிவாணன் குழு தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவமனையில் 3-ஆவது முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.