மின்கம்பத்தில் படர்ந்த கொடியால் அவதி

பூசாரிக்காடு பகுதியில் மின்கம்பத்தில் பறந்த கொடியை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 09:32 GMT

பூசாரிக்காடு பகுதியில் மின்கம்பத்தில் பறந்த கொடியை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமாபுரம் பூசாரிக்காடு பகுதியில் மின்கம்பத்தில் படர்ந்த கொடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் பூசாரிக்காடு பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் கடந்த பலமாதங்களாக கொடிபடர்ந்துள்ளது. இதனால், பலமாதங்களாக மின்விளக்கு எறியாமல் உள்ளது. இரவு நேரங்களில் கும்மிருட்டு நிலவிவருவதால் திருடர்களாலும், விசஜந்துக்களினாலும் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

குறிப்பாக, மாலை நேரங்களில் டியூசன் முடித்து செல்லும் மாணவர்கள், வேலை முடித்து செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஆகவே, மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடியை அகற்ற சம்மந்தபட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News