பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-12-18 11:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேக்கமலையான் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ.310 பறிமுதல். கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தரகம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுதாவுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 16ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், தரகம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள தேக்கமலையான் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் பாபு, வைரசாமி கடவூர் தாலுக்கா, புங்கம்பாடி, பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 310 யும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News