பெருமுக்கல் முத்திஜலஈஸ்வரர் கோவிலில் மாசி திருவிழா

மாசி திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Update: 2024-02-24 17:52 GMT

முத்திஜலஈஸ்வரர் கோவிலில் மாசி திருவிழா

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பெருமுக்கல் மலை மீதுள்ள ஸ்ரீ முத்தியாஜலஈஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பொதுமக்கள் தரிசனத்திற்காக சிறப்பு அலங்காரத்துடன் பெருமக்கள் மலையில் உள்ள முத்தியாஜலஈஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

மாசி மக திருவிழாவை முன்னிட்டு திண்டிவனம் சுற்று வட்டார கிராம மக்கள் சுமார் பல்லாயிரக்கணக்கான பெருமக்கள் மலையில் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரம்மதேசம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News