தள்ளுவண்டி தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் சேதம்

வெள்ளலூரில் வியாபாரியின் தள்ளுவண்டி தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் சேதமாகின.

Update: 2023-12-15 09:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை:வெள்ளலூர் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன்.இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருகிறார்.சம்பவத்தன்று தள்ளு வண்டியை வீட்டின் முன் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.அப்போது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் நண்பர் ஜாகீர் உசேனை அழைத்து வண்டி தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து வண்டி நிறுத்திய இடத்திற்கு ஓடியவர் நண்பரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.இதில் வண்டியில் வைக்கப்பட்டு இருந்த வெங்காயம் தக்காளி உள்ளிட்ட பத்தாயிரம் ரூபாய்க்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.இது குறித்து ஜாகீர் உசேன் போத்தனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News