எடப்பாடியில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-04-05 15:59 GMT

எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா கூட்டணியின் திமுக சார்பில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் டி எம்.செல்வகணபதி எடப்பாடி நகரத்திற்குட்பட்ட 30 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து சேலம் நாடாளுமன்ற தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர பகுதியான வீரப்பம்பாளையம், வெள்ளாண்டி வலசு, நைனாம்பட்டி, ஆவணியூர், கவுண்டம்பட்டி, ஆலச்சம்பாளையம் உள்பட 30 வார்டுகளிலும் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அவருடன் எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News