திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-04-08 08:39 GMT

பலி
திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். நண்பணின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கியத்தில் பலியாகினர். பேனரின் மேல்பக்கத்தில் கயிறு கட்டுவதற்கு லோகேஷ், தனுஷ்குமார் இருவரும் மின்மாற்றியில் ஏறியபோது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.