வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, மின்பாதை ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!!
By : King 24x7 Desk
Update: 2025-04-17 14:59 GMT
சிறை
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, மின்பாதை ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்தவர் இளமாறன் என்பவரிடம் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க மின்பாதை அலுவலர் முனுசாமி ரூபாய் 1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.