தலைமைச் செயலகத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை!!
By : King 24x7 Desk
Update: 2025-04-19 15:40 GMT
Duraimurugan
தலைமைச் செயலகத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.16 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 2024க்கு முன் வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு ராயல்டி தொகை கன மீட்டருக்கு ரூ.56ஆக இருந்தது. 2024ம் ஆண்டில் ராயல்டி தொகை ரூ.90ஆக உயர்த்தப்பட்டதற்கு கிரஷர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வெட்டி எடுக்கும் கனிமங்களை டன் அளவில் கணக்கிடாமல் கன மீட்டர் அளவிலேயே கணக்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.