கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி ஆய்வு!!
By : King 24x7 Desk
Update: 2025-07-31 12:46 GMT
kavin murder
நெல்லை கே.டி.சி. நகரில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலைச் சம்பவம் நடந்த கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்கள் மற்றும் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் சுபாஷினி பணியாற்றிய கிளினிக்கிலும் சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. கடந்த 27-ம் தேதி நெல்லையில் மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்டார்.