யாரும் தொடர்பு கொள்ளவில்லை: ஓபிஎஸ்
By : King 24x7 Desk
Update: 2025-08-18 13:37 GMT
Ops
கூட்டணியில் சேர்வது குறித்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன். கூட்டணியில் சேர்வது குறித்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை” எனக் கூறினார்.