டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா?: மத்திய அரசு விளக்கம்

Update: 2025-08-25 03:54 GMT

tiktok

2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குதலில் இந்தியா – சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது இருதரப்புக்கிடையே நல்லுறவு நிலவி வருவதால் டிக்-டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், இதுபோன்ற தகவல் மக்களை தவறாக வழிநடத்தும் செயல் எனவும் தெரிவித்துள்ளது. 

Similar News