சென்னை, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்த உத்தரவு ரத்து: ஐகோர்ட்

Update: 2025-09-02 07:30 GMT
highcourt


சென்னை மாநகராட்சியில் 2 கவுன்சிலர்கள், தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்த அரசின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர். கவுன்சிலர்கள் அளித்த பதிலை, எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது. அவர்களின் பதில்களை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும் நீதிபதி மாலா உத்தரவிட்டார்.

Similar News