காவல்துறை மரணம்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
By : King 24x7 Desk
Update: 2025-09-02 07:44 GMT
மதுரை
காவல்துறையின் காவலில் இருக்கும்போது நடக்கும் மரணங்கள் தொடர்பாக விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க கோரி திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உள்துறை செயலர் தரப்பில் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்ட நிலையில், வழக்கை செப்.22க்கு ஒத்திவைத்தது.