அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்: ஓ.பன்னீர்செல்வம்
By : King 24x7 Desk
Update: 2025-09-06 13:51 GMT
Ops
அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், "செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை. அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்கள்.செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.