மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டு சிறை உறுதி: உயர்நீதிமன்ற மதுரைகிளை

Update: 2024-07-10 09:22 GMT

மதுரை

மதுரையில் 85 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கணேசன் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைதண்டனை உறுதி செய்துள்ளனர். விசாரணை நீதிமன்றம் விதித்த சிறைதண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. போதைக்கு அடிமையானவர்களின் தற்கொலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

Similar News