ரூ. 17,000 கோடி வங்கி கடன் மோசடி : அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!!
By : King 24x7 Desk
Update: 2025-08-23 06:50 GMT
anil ambani
ரூ. 17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பணமோசடி வழக்கில் சில தினங்களுக்கு முன் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) விசாரணை நடத்திய நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.