தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை!!
By : King 24x7 Desk
Update: 2025-09-17 08:23 GMT
Yellow Alert
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழைக்கு வாய்ப்பு. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.