காரைக்குடி அருகே வீட்டில் வைத்திருந்த நகைகள், பணம் கொள்ளை!
By : King 24x7 Angel
Update: 2024-11-20 04:51 GMT
கொள்ளை
காரைக்குடி அருகே கருவியப்பட்டியில் முத்து மாரியம்மன் கோயில் நிர்வாக தலைவர் சேதுராமன் என்பவர் வீட்டில் வைத்திருந்த கோயில் மற்றும் வீட்டு நகைகள் 100 சவரன், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50,000 கொள்ளைபடிக்கப்பட்டது. சேதுராமன் வீட்டிற்கு அருகில் உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டிலும் திருட்டு நடைபெற்றுள்ளது. கொள்ளை குறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.