செஸ் ஒலிம்பியாட் போட்டி - முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி !!!

Update: 2024-09-12 05:30 GMT

செஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹங்கேரி: புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி அடைந்தது. மெராகோவை எதிர்கொண்ட இந்திய அணி ஆண்கள் பிரிவில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி தலா 1 புள்ளி பெற்று மொராகோவை விழ்த்தினர். ஜமைக்காவை எதிர்கொண்ட இந்திய அணி மகளிர் பிரிவில் 3.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.வைஷாலி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் தலா ஒரு புள்ளி, வந்திகா அகர்வால் டிரா செய்து 0.5 புள்ளி பெற்று வெற்றி பெற்றனர்.முதல் சுற்றில் ஆண்கள் அணி மொராக்கோவை விழ்த்திய நிலையில் மகளிர் அணி ஜமைக்காவை வீழ்த்தியது.11 சுற்றுகள் முடிவுகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும். 

Tags:    

Similar News