கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்த டுவைன் பிராவோ !!

Update: 2024-09-27 07:00 GMT

டுவைன் பிராவோ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரீபியன் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 24-ந் தேதி நடைபெற்ற போட்டியின் போது பிராவோவுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் பாதியில் வெளியேறினார். அந்த போட்டியில் அவர் விளையாடி அணி தோல்வியடைந்தது. அதுதான் அவரது கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் ட்வைன் ப்ராவோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் தனது கடைசி போட்டியை நேற்று விளையாடிய நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News