நேற்று நடந்த டி20-யில் இந்தியா 12.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி !!!

Update: 2024-06-06 09:10 GMT

டி20 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேக பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்களில் சுரண்டது.

ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் அர்ஷிதீப் சிங் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விராட் கோலி ஐந்து பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ரோகித் சர்மாவுடன் ரிசப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் அதே வேளையில் அடிக்கக்கூடிய பந்தையும் அடித்து விளையாடினர். ரோகித் சர்மா 36 பந்தில் அரை சதம் அடித்தார். இதனால் இந்தியா 10 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்தது. பத்து ஓவர் முடிந்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்தில் 52 ரன்கள் எடுத்த ரிட்டையர்ட் ஹார்ட் மூலம் வெளியேறினார்.

இதனால் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். சுழல் பந்துவீச்சாளர் ஒயிட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற சூரியகுமார் இரண்டு ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அப்போது அடுத்து சிவம் டுபே களமிறங்கினார். அப்போது இந்தியா 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்தது. 13ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை ரிஷப் பண்ட் சிக்ஸர்க்கு தூக்கினார். இதனால் இந்தியா 12.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News