X- தளத்தில் ஓய்வை அறிவித்த இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் !!

Update: 2024-10-08 06:10 GMT

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுடெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் (31 வயது), போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பேர் சேர்த்த தீபா கர்மாகர், 2016 ரியோ ஒலிம்பிக்சில் 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவ விட்டார். ஜிம்னாஸ்டிக்கில் சவாலானதாக விளங்கும் ‘புரோடுநோவா வால்ட்’ பிரிவில் பதக்கங்களைக் குவித்து பாராட்டுகளை அள்ளியதுடன், உலக அளவில் டாப்5 வீராங்கனைகளுள் ஒருவராகவும் தீபா முத்திரை பதித்துள்ளார்.

2021 அக்டோபரில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 21 மாத தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் களத்துக்கு திரும்பிய தீபா தாஷ்கன்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தனது ஓய்வு முடிவு குறித்து X வலைத்தள பக்கத்தில் கடிதத்தை பதிந்துள்ள கர்மாகர், நெருக்கடியான தருணங்களில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன், இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு ஒரு பயிற்சியாளராக, ஆலோசகராக செயல்பட உள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News