CSK அணியில் முக்கிய வீரர் விலகல்!

Update: 2024-03-04 10:30 GMT

டேவான் கான்வே

இந்தியாவில் மார்ச் 22-ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் போட்டியிட உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இந்த தொடர் துவங்கும் முன்னரே சிஎஸ்கே அணியின் நட்சத்திர துவக்க வீரரான டேவான் கான்வே ஐபிஎல் தொடரின் பாதி போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின், அவர் குணமடைய குறைந்தது 8 வாரங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags:    

Similar News