பிசிசிஐ கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷாருக்கான்

Update: 2024-08-01 13:30 GMT

ஷாருக்கான்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. 10 அணிகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் 6 தரப்பினர் நேரடியாகவும், 4 அணிகளின் உரிமையாளர்கள் வீடியோ கால் மூலமாகவும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கு அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News