இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி! பும்ரா, கே.எல். ராகுல் விலகல்!

Update: 2024-02-21 07:25 GMT

இந்தியா - இங்கிலாந்து 

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News