காதலனுடன் இருந்த பெண் கும்பலால் பலாத்காரம்: குமரியில் பரபரப்பு

Update: 2023-11-25 10:08 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும், நித்திரவிளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபரரும் காதலித்து வந்தனர். காதல் ஜோடி சம்பவ தினம் குமரி - கேரள எல்லை பகுதி பொழியூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பருத்தியூர் என்னும் இடத்தில் ஆறு ஒன்று கடலில் கலக்கும் பகுதியில் பொழுதை கழிக்க சென்று உள்ளனர்.

காதலன் தன்னுடன் துணைக்கு பக்கத்து ஊரை சேர்ந்த நண்பனையும் அழைத்து சென்று இருக்கிறார்.         நேரம் செல்வதை அறியாமல், இரவில் இருட்டான பகுதியில் காதல் ஜோடி நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.         இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக அந்த பகுதிக்கு 2 பேர் வந்துள்ளனர். இருவரும் திடீரென காதலனையும், சற்று தொலைவில் இருந்த அவரது நண்பரையும் அழைத்து துணிகளை கழற்ற வைத்ததோடு, சரமாரியாக தாக்கியும் உள்ளனர்.

தொடர்ந்து காதலியையும் மிரட்டி ஒருவர் பின் ஒருவராக 2 பேரும் பலாத்காரம் செய்து உள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து சக நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளனர்.

தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் அந்த கும்பல் 2 பேரையும் நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கும் காட்சிகள் உள்ளன.

Tags:    

Similar News