குட்கா விற்ற கடைக்காரர் கைது

குட்கா விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-12-03 09:01 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர்பாளையம் பகுதியில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எலவனாசூர்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு குட்கா விற்ற லூர்துசாமி மகன் அருள்ஆனந்தன் 29 கைது செய்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News