மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

ராணிப்பேட்டை: 15.59 லட்சம் மதிப்பில் 23 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

Update: 2023-12-16 16:23 GMT

அமைச்சர் காந்தி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ரூ.15.59 லட்சம் மதிப்பில் 23 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று 23 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை  உபகரணங்கள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் உட்பட மொத்தம்  15 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து,  கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளி மாணவ,  மாணவிகள் 30 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும்,  மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக சமூக சேவை புரிந்து வரும் 17 பேருக்கு நினைவு  பரிசுகளையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். 

இதில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உட்பட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News