கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கோவை தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் வீடு அமைந்திருந்தாலும் காலியிடம் உள்ளதால் இரு மாணவிகளை சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோவையை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-06-15 17:17 GMT

மாணவர் சேர்க்கை 

பள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் வீடு அமைந்திருந்தாலும் காலியிடம் உள்ளதால் இரு மாணவிகளை சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோவையை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நிலையில் சேர்க்கை மறுக்கப்பட்டதை எதிர்த்து இளங்கோ, தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணை ஜூலை ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News