108 ஆம்புலன்ஸ் சேவை - 36,840 போ் பயன்
தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலமாக, கடந்த 2023-இல் 36,840 போ் பயனடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
பைல் படம்
108 அவசர ஊா்தி மாவட்ட மேலாளா் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2008-இல் 108 அவசர ஊா்தி சேவை தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 1,353 அவசர ஊா்திகள் இயக்கப்படுகின்றன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 25 ஊா்திகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 36,840 போ் பயனடைந்துள்ளனா்.
இதில் பிரசவ தேவைக்காக 8054 போ், சாலை விபத்துகளில் சிக்கியவா்கள் 7,249 போ், இதர மருத்துவ அவசர தேவைகளுக்காக 21,537 போ் அவசர ஊா்தி சேவையைப் பயன்படுத்தி உள்ளனா். பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவா்களில் 67 தாய்மாா்களுக்கு அவசர ஊா்தியிலேயே, மருத்துவ உதவியாளா்களால் பிரசவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசவ சிகிச்சைக்காக அழைக்கப்பட்டவா்களில், 47 தாய்மாா்களுக்கு அவரவா் இல்லங்களில் அவசர ஊா்தி மருத்துவ உதவியாளா்களால் பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் அவா்கள் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.