சென்னை மாநகராட்சியில் 113 ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கல்

சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 113 ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கங்கள் சான்றிதழ்கள் மேயர் வழங்கினார்.

Update: 2024-01-13 12:15 GMT

தங்கப்பதக்கம் வழங்கிய மேயர்

சென்னை ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 113 ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூடுதல் ஆணையாளர் . லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, வட்டார துணை ஆணையாளர்கள் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News