காஞ்சியில் 162 வீடுகள் சேதம்..!

காஞ்சியில் 162 வீடுகள் சேதம் 65 கால்நடைகள் உயிரிழந்தது.

Update: 2023-12-09 12:23 GMT
மீட்பு பணி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'மிக்ஜாம்' புயல் குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் வட்டாரங்களில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில், 162 வீடுகள் சேதமாகியுள்ளன. மேலும், ஆடு, மாடு என 65 கால் நடைகள் இறந்துள்ளன. குன்றத்துார் தாலுகாவில் உள்ள கரைமா நகரில், பிரசாந்த், 28, என்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

வேளாண் பாதிப்பும், ஏரிகள் பாதிப்பு விபரமும் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. குன்றத்துார் தாலுக்காவில், வரதராஜபுரம், கொளப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம், மலையம்பாக்கம் குடியிருப்பு பகுதியில், மின் தடை இருப்பதால் மக்கள் தவிக்கின்றனர்.

Tags:    

Similar News