நீதிமன்ற ஊழியரிடம் 2¾ பவுன் நகை பறிப்பு
நீதிமன்ற ஊழியரிடம் 2¾ பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 16:00 GMT
கோப்பு படம்
சேலம் கன்னங்குறிச்சி கச்சா தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 35). கோர்ட்டு ஊழியர் இவர் நேற்று இரவு செவ்வாய்ப்பேட்டை வெங்கடப்பன் ரோட்டில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென அவர்கள் ஆனந்தன் கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனிடம் நகையை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.