ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினிபஸ் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழப்பு..

Update: 2023-10-30 15:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு- புதுப்பட்டி நோக்கி மினி பஸ் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது கிறிஸ்டியான்பேட்டை போதர்குளம் கண்மாய் அருகே பஸ் அதிவேகமாக வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வ.புதுப்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அதே ஊரை சேர்ந்த பாண்டி என்ற 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள்,பயணிகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அரசு வத்திராயிருப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலத்த காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும், மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேருந்து கவிழ்ந்து இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News