முதலமைச்சர் வீடு முற்றுகையிட முயன்ற 200 CPS ஒழிப்பு இயக்கத்தினர்கைது

தமிழக முதல்வர் இல்லத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்ட CPS ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்‌.

Update: 2024-02-17 02:45 GMT
CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட அனைத்து அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் இணைந்து நந்தனம் அன்பழகன் மாளிகையில் இருந்து தமிழக முதல்வர் இல்லத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட CPS ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்‌.
Tags:    

Similar News