அரசு பணம் ரூ.2.35 கோடி கையாடல் - ஆர்.ஐ, கணவருடன் கைது

Update: 2023-11-20 02:49 GMT

சீதா பிரியா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகம் செயல்படுகிறது.இங்கு சீனியர் ஆர்.ஐயாக பணிபுரிந்து வருபவர் சீதா பிரியா. இவர் ஆதி திராவிட விடுதி மாணவர்களுக்காக அரசு ஒதுக்கிய 9 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் அது குறித்து ஆட்சியர் விசாரனை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சீதா பிரியா கையாடல் செய்த பணத்தில் 5 லட்ச ரூபாயை திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் மீதமுள்ள தொகையை சீதா பிரியா செலுத்தாததால் ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் உமா மகேஸ்வரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்துள்ளார். அது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை சீதா பிரியா 2 கோடியே 35 லட்சத்தி 36 ஆயிரத்தி 468 ரூபாயை கையாடல் செய்ததுடன் தனது கனவர் ராம்குமார் உள்ளிட்ட 4 பேரின் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றியதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags:    

Similar News