அதிமுகவில் 3500 பேர் விருப்பமனு தாக்கல் - முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட இதுவரை 3500 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் தெரிவித்தார்.

Update: 2024-03-06 16:18 GMT

முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரில் உள்ள பிஆர்சி பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,        அதிமுகவில் இதுவரை 3500 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பமான அளித்துள்ளனர்.ஆனால் சில ஊடகங்கள் தேர்தலில் போட்டியிட யாரும் தயாராக இல்லை என்பது போல் செய்திகள் வெளியிடுகின்றன.தமிழகத்தில் போதைப்பொருள் கடத்துவது என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதில் வெந்த புண்ணில் வேல் பாசுவது போல் தமிழக முதல்வர் இது குறித்து வாய் திறக்காதது வேலியே பயிரை மேய்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டுமென அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் மருத்துவமனை தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்; என அறிவிப்பு வெளியிட்டார். தற்போது பணிகள் தொடங்கி இருப்பது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News