இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து 37 மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 37 மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-29 04:15 GMT

இலங்கை கடற்படை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்தநிலையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மூன்று விசைபடகையும் அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 14 மீன்வர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது . அடுத்தடுத்து ஐந்து விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு 37 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News